நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடவுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்!
பொசன் பூரணையை முன்னிட்டு, நாளை முதல் 3,500 பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், மிகிந்தலை மற்றும் அனுராதபுரத்தில் அமைந்துள்ள 8 வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக குறித்த பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்தல்
வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாக கொண்டு, போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்தப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொசன் வாரம் நேற்று (07) ஆரம்பமாகி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
