புல்மோட்டை பிரதான வீதியில் விபத்து - இரு இளைஞர்கள் படுகாயம்
திருகோணமலை -புல்மோட்டை பிரதான வீதி நிலாவெளி பீச் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டை பிரதேசத்திலிருந்து திருகோணமலை நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் கும்புறுபிட்டி பகுதியைச் சேர்ந்த 28, 30 வயதுடைய இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 1990 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
