சட்டத்துறை வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை என்றால் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி (Video)
சட்டத்துறை வரலாற்றில் மறக்க முடியாத ஆளுமை என்றால் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரியே என ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கிளிநொச்சியில் இடம்பெற்றிருந்தது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் அலுவலக வளாகத்தில் நேற்று(26.07.2023) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்பொழுது அன்னாரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலை மற்றும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு ஈகைசுடரும் ஏற்றப்பட்டது.
மேலும், விழிப்புலனற்றோருக்கான உணவுப் பொதிகள் மற்றும் பொருண்மியம் நலிந்த மாணவர்களுக்கான காலணியும் கௌரி சங்கரி தவராசாவின் ஞாபகார்த்த அறக்கட்டளையினால் வழங்கபட்டது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன்,வன்னி லழிப்புலனற்றோர் சங்கத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
