மத்திய காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 28 பேர் பலி
மத்திய காசாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்து பாடசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காசாவின் வடக்கு பகுதியில் தாக்குதல் வலுப்பெற்றுள்ள நிலையில்,மூன்று மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனும் அச்சத்தில் அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற டெய்ர் அல்-பலா நகரிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட போர்
ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த போரில் இருந்து, தம்மை பாதுகாத்துக்கொள்ள மில்லியன் கணக்காக மக்கள் டெய்ர் அல்-பலா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

எனினும், இன்று தமது படையினர் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறி, சிவிலியன் உள்கட்டமைப்பை ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டு துஸ்பிரயோகம் செய்ததற்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளை ஹமாஸ் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam