விசேட சுற்றிவளைப்பில் பொலிஸாரிடம் சிக்கிய 277 பேர்
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 86 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 112 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 73 பேரும், கஞ்சா செடிகளுடன் 6 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சுற்றிவளைப்பு
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, 61 கிராம் 161 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 744 கிராம் 377 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் 1 கிலோ 507 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 2 இலட்சத்து 57 ஆயிரத்து 991 கஞ்சா செடிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 10 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
