இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்
போலி அடையாளங்களை பயன்படுத்தி 26 பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அடையாளம் காணப்பட்டுள்ள 26 பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக நிறைவு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதவள மற்றும் கடல்சார் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி கடவுச்சீட்டு
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக, பிற நபர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்று இவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போதே நீதவான் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த 26 சந்தேக நபர்களினதும் கைரேகை பதிவுகள் தொடர்பான அறிக்கைகளை கைரேகை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட விசாரணை
எனினும் இதுவரை 2 அறிக்கைகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணை அதிகாரியின் பணி சுமை காரணமாக அனைத்து அறிக்கைகளும் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை என பொலிஸ் தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை அதிகாரியின் பணி சுமைகளை ஒரு காரணமாக ஏற்க முடியாது நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து அறிக்கைகளையும் உடனடியாகக் கோரி விசாரணைகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை மற்றும் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 30 நிமிடங்கள் முன்
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam