சுங்க திணைக்களத்திற்கு 26 கோடி ரூபாவினை செலுத்த தவறியுள்ள பிரபல நிறுவனம்
இலங்கையின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனம் ஒன்று இலங்கை சுங்க திணைக்களத்திற்கு 26 கோடி ரூபாவிற்கும் அதிகமான அபராதத்தை செலுத்த தவறியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தொகையை செலுத்தாததால், அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்ததாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
டயர்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்காக சுங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாக ஏறக்குறைய 800 கோடி ரூபாய் விதிக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த தொகை இருபத்தி ஆறு கோடி ரூபாயாக (261,000,000 ரூபாய்) குறைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். .
மார்ச் 18 அன்று விதிக்கப்பட்ட அபராதத்தை கூட நிறுவனம் செலுத்தாமல் தவிர்த்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
டயர் இறக்குமதி இடைநிறுத்தம்
இலங்கைக்கான டயர் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டதன் பின்னர் குறித்த நிறுவனம் சுமார் 500 கோடி ரூபா பெறுமதியான டயர்களை இலங்கை சுங்க மற்றும் இலங்கை முதலீட்டுச் சபைக்கு தெரிவிக்காமல் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், 2021ம் ஆண்டு இந்த நிறுவனம் தனது முழு உற்பத்தியையும் உள்ளூர் சந்தைக்கு திருப்பியதன் மூலம் பெரும் இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் 20 சதவீதத்தை மட்டுமே சுங்க வரியாக செலுத்திய பிறகு உள்நாட்டு சந்தையில் வெளியிட சட்டம் அனுமதிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் படி, சுங்கத் திணைக்களத்தின் தணிக்கைப் பிரிவு அதிகாரிகள் முறைப்படி ஆய்வு நடத்தியதில், உள்ளூர் சந்தையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் பொருட்களை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
