கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம், 13ஆம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெறவுள்ளதாகக் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா தொடர்பான குறித்த ஊடக சந்திப்பின் போது பட்டமளிப்பு விழாக்குழு தலைவர் பேராசிரியர் எம்.சிதம்பரேசன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.பகீரதன், சிரேஷ்ட உதவிப் பதிவாளர் (கல்விப் பிரிவு) நிசாந்தினி நிருமிதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜாவின் தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில் இடம்பெறவுள்ள பொதுப்பட்டமளிப்பு விழாவின் போது இம்முறை 1958 உள்வாரி மற்றும் வெளிவாரி பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டப்பின் தகைமை பெறுபவர்களுக்கும், கௌரவப் பட்டம் பெறுபவர்களும் தமக்கான பட்டத்தினை பெறவுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்வியமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கே.கபில பெரேரா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பீ.உடவத்த கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்கள்.
இம்முறை கிழக்கு பல்கலைக்கழகத்தால் இப்பல்கலைக்கழகக்தின் காலஞ்சென்ற முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதின் சேவையினை நினைவு கூர்ந்து கௌரவ விஞ்ஞான கலாநிதிப்பட்டமும், மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளரும், சமூகவியலாளருமான வெல்லவூர்க்கோபால் என்றழைக்கப்படும் சீனித்தம்பி கோபாலசிங்கத்தின் சேவையினைப் பாராட்டி கௌரவ முது இலக்கியமாணிப் பட்டமும் வழங்கப்படவிருப்பது மிகவும் முக்கியமான விடயமாகக் கருதப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக 1958 மாணவர்களுக்கான பொதுப்பட்டமளிப்பு நிகழ்வு நடாத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். இந்நிகழ்வில் வணிக நிர்வாகத்தில் முதுமாணி (ஆடீயு), முதுகலைமாணி (ஆயு), முதுகல்விமாணி(ஆநுன), அபிவிருத்திப் பொருளியலில் முதுமாணி (ஆனுநு) ஆகிய 133 பட்டப்பின் தகமைகளுக்கான பட்டங்களும், 2 கௌரவப் பட்டங்களும் முதலாம் நாள் முதலாவது அமர்வில் வழங்கப்படவுள்ளன.
ஏனைய இளமாணிப்பட்டங்களுக்காக 2ஆவது அமர்வில் 408 பட்டதாரி மாணவர்களும், 3வது
அமர்வில் 340 பட்டதாரி மாணவர்களும், இரண்டாம் நாள் நிகழ்வில் முதலாவது
அமர்வில்330 பட்டதாரி மாணவர்களும், 2ஆவது அமர்வில் 360 பட்டதாரி மாணவர்களும்,
3ஆவதுஅமர்வில் 385 பட்டதாரி மாணவர்களும் பட்டமளித்துக் கௌரவிக்கப்படவுள்ளனர்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
