கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 2500 பேர் பலி
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2485 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் 19,740 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 2371 விபத்துக்கள் உயிராபத்து ஏற்படும் வகையிலானவை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதிகளவான விபத்துக்கள்
மோட்டார் சைக்கிள்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன. அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியமையே அதிகளவான விபத்துக்களுக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகன விபத்துக்களினால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.