இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள வெளிநாட்டில் தலைமறைவாகிய ஆபத்தான நபர்கள்
வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலையில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளில் 24 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 2024 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள்
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்ட 24 குற்றவாளிகளில் 10 பேர் 2024 இல் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டில், 11 குற்றவாளிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர், இந்த ஆண்டு இதுவரை, 03 குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் தலைமறைவாகி, இந்த நாட்டில் குற்றங்களைச் செய்து வரும் பாதாள உலகக் கும்பல் குண்டர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் மோசடி செய்பவர்கள் உட்பட பல்வேறு வகையான கிட்டத்தட்ட 300 குற்றவாளிகள் பற்றிய தகவல்களும் பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்துள்ளன.
சிவப்பு பிடியாணை
மேலும் அவர்களுக்கு எதிராக இன்டர்போலிடமிருந்து சிவப்பு பிடியாணை பெற எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், வெளிநாடுகளில் தலைமறைவாகி, இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்ட 103 குற்றவாளிகளுக்கு இன்டர்போல் சிவப்பு பிடியாணை பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.