கிளிநொச்சியில் 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் 23 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்ககை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் இன்றைய தினம் மாத்திரம் 23 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இவர்களில் 11 பேர் கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களும், மேலும் 5 பேர் கிளிநொச்சி பொதுச் சந்தையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு சில நாட்களில் மாத்திரம் 100 பேருக்கு மேல் கோவிட் தொற்றுடன் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே பொது மக்களை கட்டாயம் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்
என்பதோடு, தேவையற்ற பயணங்கள், ஒன்று கூடுவதனையும்
தவிர்த்துக்கொள்ளுமாறும் மாவட்ட சுகாதார பிரிவு வேண்டுகோள்
விடுத்துள்ளது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan