அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு (Photos)
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு கடற்தொழிலாளர்களும் நிபந்தனைகளுடன் ஊர்காவற்துறை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - காரைநகரை அண்டிய கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 22 கடற்தொழிலாளர்களை இரண்டு விசைப்படகுகளுடன் கடற்படையினர் கடந்த மாதம் 24 ஆம் திகதி கைது செய்து யாழ்ப்பாணம் - மயிலட்டி கடற்றொழில் துறைமுகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
அதனையடுத்து கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் சட்ட நடவடிக்கைக்காகக் கையளிக்கப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட போது குறித்த கடற்தொழிலாளர்களை மார்ச் மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 10ஆம் மீண்டும் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது 22 கடற்தொழிலாளர்களையும் மார்ச் மாதம் 23 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று சிறைகாவல் முடிந்து ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர். இதன்போது கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை எல்லைக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டமை, நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி கடற்றொழிலில் ஈடுபட்டமை, மற்றும் தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமை ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறுமாதகால சாதாரண சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
13 கடற்தொழிலாளர்கள் கடற்தொழில் இழுவைப்படகு உரிமையாளர்களாக உள்ளமையினால் படகு பறிமுதல்
செய்யப்பட்ட அதேவேளை மற்றைய படகுக்கான உரிமை கோரும் வழக்கு எதிர்வரும் ஜூன்
மாதம் 24ஆம் திகதி தவணையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
