இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 22 இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்ற அதிரடி உத்தரவு

Sri Lanka Police Indian fishermen Sri Lanka Navy Sri Lanka Fisherman Arrest
By Rakesh Feb 19, 2026 02:18 PM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு இன்று(19.02.2026) மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவு

தமிழகத்தை சேர்ந்த 10 கடற்றொழிலாளர்கள் இரு படகில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டனர்.

இதன் போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த 10 தமிழக கடற்றொழிலாளர்களையும் கைது செய்ததோடு, அவர்கள் பயணித்த 02 படகையும் கைப்பற்றி தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 22 இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்ற அதிரடி உத்தரவு | 22 Indian Fishermen Arrested

தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்று(19) மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 10 கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.     

மேலதிக தகவல் - ஆஷிக்

முதலாம் இணைப்பு

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய கடற்றொழிலாளர்கள் நான்கு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நெடுந்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடல் பகுதிகளில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவர்: முன்னாள் கடற்படை தளபதி வெளியிட்ட கருத்து

விடுதலைப் புலிகளின் தலைவர் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவர்: முன்னாள் கடற்படை தளபதி வெளியிட்ட கருத்து

இதன்போது, நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்த இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

22 கடற்றொழிலாளர்கள் கைது

இதேவேளை, மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட மேலும் 10 இந்திய கடற்றொழிலாளர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 22 இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்ற அதிரடி உத்தரவு | 22 Indian Fishermen Arrested

கைது செய்யப்பட்ட 22 கடற்றொழிலாளர்களும் அவர்களது நான்கு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்தப் பிரதேச கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

தையிட்டி விவகாரம்: ஒரு துண்டு நிலமும் மீள கிடைக்காது! விகாராதிபதி பகிரங்கம்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய சந்தேகநபரின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் தெரியவந்துள்ள விடயம்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவிய சந்தேகநபரின் வங்கிக் கணக்குகள் தொடர்பில் தெரியவந்துள்ள விடயம்

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US