இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 22 இந்திய கடற்றொழிலாளர்கள்: நீதிமன்ற அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக கடற்றொழிலாளர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு இன்று(19.02.2026) மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
தமிழகத்தை சேர்ந்த 10 கடற்றொழிலாளர்கள் இரு படகில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டனர்.
இதன் போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த 10 தமிழக கடற்றொழிலாளர்களையும் கைது செய்ததோடு, அவர்கள் பயணித்த 02 படகையும் கைப்பற்றி தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தலைமன்னார் கடற்படையினர் குறித்த கடற்றொழிலாளர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்று(19) மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 10 கடற்றொழிலாளர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக தகவல் - ஆஷிக்
முதலாம் இணைப்பு
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய கடற்றொழிலாளர்கள் நான்கு படகுகளுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். நெடுந்தீவு மற்றும் மன்னார் ஆகிய கடல் பகுதிகளில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, நெடுந்தீவு கடற்பரப்பில் இரண்டு படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்த இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
22 கடற்றொழிலாளர்கள் கைது
இதேவேளை, மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட மேலும் 10 இந்திய கடற்றொழிலாளர்கள் இரண்டு படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 22 கடற்றொழிலாளர்களும் அவர்களது நான்கு படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்தப் பிரதேச கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய கடற்றொழில் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam