இலங்கையை நிலைகுலைய வைத்துள்ள சூறாவளி - தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
இலங்கையை பாதித்த டித்வா சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களை தேசிய பேரிடர் பகுதிகளாக அறிவித்து சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளை பல நாட்களாக பாதித்த பாதகமான வானிலை, கனமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேசிய இடர்காப்பு மத்திய நிலையம்
அதற்கமைய, கண்டி, நுவரெலியா, பதுளை, குருணாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அனுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலநறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா, களுத்துறை ஆகியவை தேசிய பேரிடர் வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

டித்வா சூறாவளி காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய இடர்காப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri