22 நாட்களுக்கு மட்டுமே எரிபொருளை களஞ்சியப்படுத்தி வைக்க முடியும்
இலங்கையில் சுமார் 22 நாட்களுக்கு போதுமான அளவு எரிபொருள் மட்டுமே களஞ்சிய படுத்தே வைக்க முடியும் என மீன்வளையை மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை ஒன்று தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்வி வேடிக்கையாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவினால் கூட எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முடிந்த அளவு எரிபொருள் விநியோகத்தை சீராக பேணுவதற்கு முயற்சித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் நாட்டின் எரிபொருள் களஞ்சியங்களை விரிவுபடுத்த தவறியிருந்தனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்பொழுது கூடுதல் நாட்களுக்கு எரிபொருட்களை களஞ்சிய படுத்தக் கூடிய வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நெருக்கடியான நிலையிலும் ஒரு மணித்தியாலம் அல்லது ஒரு நிமிட வேண்டும் நாட்டில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் சவால்களை எதிர் நோக்க நேரிடலாம் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்புணர்ச்சியுடன் பேச வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக அளவில் நிலவி வரும் எரிபொருள் பிரச்சினை இலங்கை மற்றும் விதிவிலக்கு அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இந்த அரசாங்கம் நிலைமைகளை உரிய முறையில் முகாமைத்துவம் செய்து மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த சவால்களை எதிர்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கு தேவையான எரிபொருட்களை 45 நாட்களில் களஞ்சிய ப்படுத்தக்கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் நிகழும் ராகு-கேது நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் இறுதியில் ஜாக்பாட் இந்த ராசிகளுக்கு தான்! Manithan