கோவிட் தொற்று காரணமாக 21 வயது பெண் பரிதாபமாக மரணம்
வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக 21 வயது பெண் உட்பட 6 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அட்டமஸ்கட பகுதியில் பெண் ஒருவரும் (வயது 21), தேக்கவத்தை பகுதியில் நகரசபை உறுப்பினரான பெண் ஒருவரும் (வயது 55), பம்பைமடு காப்பகம் ஒன்றில் ஆண் ஒருவரும் (வயது 78), குருமன்காடு பகுதியில் பெண் ஒருவரும் (வயது 75), பட்டானிச்சூர் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 65), ஆர்டிஎஸ் விடுதியில் ஆண் ஒருவரும் (வயது 92) என 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப்பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.