20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - ஐ.தே.க
நாட்டை மீட்டெடுக்க வேண்டுமாயின் 20ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இரசாயன உரங்களை தடை செய்வது உள்ளிட்ட அரசாங்கத்தின் எதேச்சாதிகார தீர்மானங்களை ரத்து செய்யாவிட்டால் எதிர்வரும் காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு புத்திஜீவிகள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரும் பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த பிழையை திருத்திக் கொள்ள வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சி போன்றதொரு அரசியல் கட்சியுடன் இணைந்து கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.