விரைவில் நிறுவப்படவுள்ள 20 வலயக் கல்வி அலுவலகங்கள் : அரவிந்த் குமார்
நாட்டின் கல்வி துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக 20 வலயக் கல்வி அலுவலகங்களை நிறுவுவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
"நிலையான நாட்டிற்கான கூட்டுப் பாதை" எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி புலமைப்பரிசில்
இதன்போது, எதிர்வரும் கல்வியாண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 100,000 மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கவுள்ள "ஜனாதிபதி புலமைப்பரிசில்" திட்டத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த முயற்சி மாணவர்கள் தங்கள் கல்வியை வெற்றிகரமாக முடிப்பதற்கு பெரிதும் உதவும் எனவும் எதிர்கால கல்வி முயற்சிகளை செயல்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
