2026 உலகக் கிண்ண கால்பந்து: மெக்ஸிகோவை எதிர்கொள்ளும் இங்கிலாந்து
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் பதினாறு அணிகளுக்கான (Round of 16) சுற்றில் மெக்ஸிகோவை எதிர்கொள்ளவுள்ள இங்கிலாந்து கால்பந்து அணியின் வீரர்களுக்கு, ‘வயாகரா’ மாத்திரைகளைப் பயன்படுத்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மெக்ஸிகோ நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற எஸ்டேடியோ அஸ்டெகா மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இந்த மைதானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 7,350 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
ஒட்சிசன் பற்றாக்குறை
இந்த அதிகப்படியான உயரத்தில் விளையாடும்போது வீரர்களுக்கு ஒட்சிசன் பற்றாக்குறை ஏற்பட்டு, மூச்சுத் திணறல், இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் அதீத சோர்வு போன்ற உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த உயரமான சூழலுக்கு இங்கிலாந்து வீரர்கள் பழக்கப்படவில்லை என்பதால், அந்தப் பாதிப்புகளைச் சமாளிக்க அவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் 'வயாகரா' மாத்திரைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விறைப்புத்தன்மை குறைபாட்டிற்காகப் பயன்படுத்தப்படும் இந்த மருந்து, நுரையீரல் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி ஒட்சிசன் ஓட்டத்தைச் சீராக்க உதவுகிறது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளர் தோமஸ் டூச்செல் கூறுகையில், "இந்த உயரமான சூழலுக்கு நாங்கள் பழகிவிட முடியாது.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு விதிமுறை
இது மெக்ஸிகோ அணிக்கு ஒரு பெரிய சாதகமான விடயம். நாங்கள் சில தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் அதற்குத் தயாராக இருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரக விதிமுறைகளின்படி, வயாகரா தடை செய்யப்பட்ட மருந்து அல்ல என்பதால், விளையாட்டு வீரர்கள் இதைப் பயன்படுத்துவதற்குத் தடையில்லை.

எஸ்டேடியோ அஸ்டெகா மைதானத்தில் இதுவரை மெக்ஸிகோ அணி விளையாடிய 89 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது.
எனவே, இங்கிலாந்து அணி உடல் ரீதியான சவால்களை முறியடிக்க இந்த மருத்துவ அணுகுமுறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.