வன்னி மாவட்டத்தைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி
வன்னி
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட 2 உறுப்பினர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற நாடாளுமன்றத்திற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்
1. செல்வத்தம்பி திலகநாதன் - 10,652
2. ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
1. அப்துல் ரிஷாட் பதியுதீன் - 21,018
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்
1. துறைராசா ரவிகுமார் - 11,215
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1 ஆசனம்
1. செல்வம் அடைக்கலநாதன் - 5,695
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 1 ஆசனம்
1. காதர் மஸ்தான் - 13,511
வன்னி மாவட்ட இறுதி முடிவு
வன்னி மாவட்டத்திற்கான மொத்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 39,894 வாக்குகளை வன்னி மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 32,232 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 2 ஆசனங்களை வெற்றிகொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 29,711வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 21,102 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் கட்சி 17, 710 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 306,081ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 211,140
செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 195,886
நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 15,254 ஆகும்.
கடந்த தேர்தலில்...
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது வன்னி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 69,916 வாக்குளையும் 03 ஆசனங்களையும் வன்னி மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 42,524 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வன்னி மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் வன்னி மாவட்டத்தில் 37,883 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் வன்னி மாவட்டத்தில் 11,310 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டனர்.
மன்னார் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் மன்னார் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி 15,007வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 8684 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி 7948 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தமிழரசுக் கட்சி 7490 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் கட்சி 6044 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
வவுனியா தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் வவுனியா தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி 19,786 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி 10,736 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் கட்சி 8354 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
ஜனநாயக தேசியக் கூட்டணி 6556 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5886 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 5575 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
முல்லைத்தீவு தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி, 14,297 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 7,789 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 5,133 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 4,664 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,274 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
தபால் மூல வாக்கு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் வன்னி மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 4,371 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி, 2,349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 1,825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 1,399 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
