சூடு பிடிக்கும் தேர்தல் களம்: தீவிர நடவடிக்கையில் கண்காணிப்பு குழுவினர்
9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை முதல் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் பல்தரப்பட்ட குழுவினர் தேர்தல் கால தொடக்கத்திலிருந்தே மேற்கொண்டு வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியம்
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |