சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புலமை பரிசில் பரீட்சை: எடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு நடவடிக்கை
2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பரீட்சை திணைக்கள அதிகாரிகள் இருவர், பேராசிரியர்கள் இருவர் அடங்கிய குழுவொன்று இடம்பெற்றுள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் மதிப்பீட்டை இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்த தீர்மானத்திற்கமைய, இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எட்டு வினாக்கள் வெளியீடு
இந்த குழுவின் ஆய்வு அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சைக்கு முன்னர் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், எட்டு வினாக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த பெற்றோர் குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழு வெளியான வினாக்களின் எண்ணிக்கை தொடர்பில் விரிவாக ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
