நுண்கடன் வலையில் சிக்கி 200 பெண்கள் பலி: ஐக்கிய நாடுகள் சபை பகீர் தகவல்

Srilanka Government Lone United Nation
By Kanamirtha Dec 07, 2021 04:49 PM GMT
Kanamirtha

Kanamirtha

in இலங்கை
Report

எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தப்படாத நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வட்டி செலுத்த முடியாமல் 200ற்கும் மேற்பட்ட இலங்கை பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கிராமப்புற பெண்களின் உயிரைப் பறிக்கும் நுண்கடன் திட்டம் ஏற்படுத்திய அழிவின் அளவு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வந்த ஐ.நாவின் விசேட தூதுவரால் வெளிப்படுத்தப்பட்டது.

“கடனுக்கு அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுவதால் பல பெண்கள் கடனுக்கு இரையாகிறார்கள். இதன் விளைவாக, கடந்த சில ஆண்டுகளில் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,” எனச் சமகால அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகடா கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்வியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் சுரண்டலுக்கு ஆளானவர்கள் ஆகியோரை அவர் சந்தித்ததாக, ஐ.நாவின் இலங்கைக்கான தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் வாக்குறுதியானது இலட்சக்கணக்கான கிராமப்புற பெண்களைக் கடன் பொறியிலிருந்து காப்பாற்றுவதாகும். “சில வங்கிகளுக்கு சட்டப்பூர்வ உரிமை கூட இல்லை, சில நிதி நிறுவனங்கள் கடந்த காலங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நாடு முழுவதும் நெருப்பு வட்டியைவிட அதிக வட்டிக்கு வழங்கிய நுண்கடன் காரணமாக, இலட்சக்கணக்கான பெண்கள் அழுத்தத்தில் உள்ளனர்.

அத்தகைய பெண்களுக்கு விரைவான நிவாரணம் அளிக்கும் வகையில், நியாயமற்ற முறையில் வழங்கப்பட்ட சிறு கடன்கள் இரத்து செய்யப்படும், ”என சுபிட்சத்தின் நோக்கு தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதையே ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் வெளிப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

“இந்த சுரண்டல் நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் அரசாங்கம் இதுவரை எந்தவொரு பயனுள்ள அல்லது சரியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதில் நான் ஆழ்ந்த கவலையடைகின்றேன்.

இதன் விளைவாக, அவர்கள் தங்கள் வேலையைத் தடையின்றி தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்,” என டொமோயா ஒபோகடா தெரிவித்துள்ளார். தனது விஜயத்தின் போது முன்வைக்கப்பட்ட பல பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளதாகத் தெரிவித்த விசேட பிரதிநிதி, இந்த கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சட்டமியற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமகால அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகடாவின் இறுதி அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US