மட்டக்களப்பில் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பரிதாப மரணம்
மட்டக்களப்பு- புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(27.5.2026) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு- திருப்பெருந்துறை, 04ஆவது குறுக்கு வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு வாவியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் நீரில் மூழ்கியுள்ளார்.

இதையடுத்து விமான படையினர் பொதுமக்கள் வாவியில் இருந்து இளைஞனை மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.