இலங்கை மத்திய வங்கியால் 20 ரூபா குற்றிநாணயம் வெளியீடு
இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
முதன்முதலில் இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு 1871ம் ஆண்டு நடாத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை
150 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியால் அதனை நினைவுகூறும்முகமாக 20 ரூபா ஞாபகார்த்த குற்றிநாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வெளியிடப்பட்ட குற்றி நாணயம் நேற்று திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்மவிற்கு மாவட்ட புள்ளிவிபரவியலாளர் ஸ.சரீப்டீனினால் வழங்கி வைக்கப்பட்டது.
நாணயக்குற்றி
நினைவு நாணயக்குற்றி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், உட்பட மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டன.
அத்துடன் பிரதேச செயலாளர்களுக்கும் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட புள்ளிவிபரவியலாளர் தெரிவித்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
