உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது: உக்ரைன் ஜனாதிபதி - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனின் 20 சதவீத நிலப்பரப்பு ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாக, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
லக்ஸம்பர்க் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் ஆற்றிய உரையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
‘நாங்கள் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இருக்க விரும்புகிறோம்’ என்பதுதான் லக்ஸம்பர்கின் தேசிய கோஷமாகும்.
தற்போது நாங்கள் ரஷ்யாவுடன் போரிட்டு வருவதும் அந்தக் கொள்கையின் அடிப்படையில்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,