பாகிஸ்தானில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவாவில் வடக்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் உளவு தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.
இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கடந்த புதன்கிழமை தெற்கு வசீரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் பாகிஸ்தானிய வீரர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் மீது நடந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-ஐ-தலீபான்கள் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.