இங்கிலாந்தின் கிராமமொன்றில் பதிவுப் பெற்றுள்ள இரண்டு ஈழத்தமிழர்கள்
இங்கிலாந்தின்(UK) வடக்கு யோர்க்சயரில் உள்ள ப்ரோட்டன் கிராமத்தில் வாழ்பவர்களில், இரண்டு இலங்கையர்கள் மட்டுமே வெள்ளையர் அல்லாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, வடக்கு யோர்க்சயரின் குறித்த கிராமத்தில் 1108 பேரில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
இலங்கையர்கள்
இதன்போதே வெள்ளையர்கள் அல்லாத இரண்டு இலங்கை ஆண்கள் அங்கு வசிப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நண்பர்களான சேம் ருத்ரான் மற்றும் சாம்பசிவன் ஆகியோரே அவர்கள் இருவருமாகும். அவர்கள் குறித்த கிராமத்தில் முறையே விற்பனையகம் மற்றும் அஞ்சல்; அலுவலகத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தாம் தாயகத்தை விட்டு வெளியேறிய பின்னர், உயிருக்கு ஆபத்து இல்லாத ஒரு கிராமத்தை உணர்வதாக குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.
வாடகைக்குறைவு என்பதற்காகவே தாம் இந்த கிராமத்தில் குடியேறியதாகவும், உள்ளூர் மக்கள் தங்களை அன்பாக வரவேற்றதாகவும் குறித்த இரண்டு இலங்கையர்களும் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
