பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் பதற்றம் - பொலிஸார் துப்பாக்கி சூடு
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் தாக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரை தாக்கியதாக கூறப்படும் குழுவை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 4 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் மீது தாக்குதல்
பேருவளை துறைமுகத்திற்கு அருகில் லொறி ஒன்றின் மீது ஏறி பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினரிடம் வீதியை மறிக்க வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அது மோதலாக மாறிய நிலையில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
துப்பாக்கி சூடு
அந்தக் குழுவைக் கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி 2 முறை சுட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கான பொலிஸ் அதிகாரி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் பினானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri