புத்தர் சிலையில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு! இரண்டு சந்தேக நபர்கள் கைது
புத்தர் சிலைகளின் நெற்றியில் இருக்கும் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இரண்டு சந்தேக நபர்களை நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(8.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலயங்களில் இருக்கும் புத்தர் சிலைகளின் நெற்றியில் காணப்படும் கலசங்களை இரண்டு சந்தேக நபர்களும் திருடியுள்ளனர்.
இருவர் கைது
இறுதியாக முச்சக்கர வண்டியில் சென்று குறித்த இரண்டு பேரும் நாவலப்பிட்டியில் உள்ள கெட்டபுலாவ ஆலயத்தில் உள்ள புத்தர் சிலையின் நெற்றியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசத்தைத் திருடும் காட்சிகள் ஆலயத்தில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில் நாவலப்பிட்டி பொலிஸ் அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் 45-50 வயதுக்குட்பட்ட பிலிமதலாவ சேர்ந்தவர்களாவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புத்தர் சிலைகளின் தலைகளை சேதப்படுத்தி இலங்கை முழுவதும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று கலச நினைவுச் சின்னங்களிலிருந்து பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உருக்கிய தங்கம் ஒரு தொகையையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
குறிப்பாக குருநாகல் மற்றும் பிலிமதலாவ பகுதிகளில் தங்கப் பொருட்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தால் இவ் இரண்டு சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தங்கம் உருக்கப்பட்டு விற்கப்பட்டது என்பது பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து குற்றத்திற்குப் பயன்படுத்திய முச்சக்கர வண்டி ஒன்றினையும் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணையின் பின்னர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan