நடுவானில் போர் விமானங்கள் இரண்டு திடீரென மோதி விபத்து - விமானிகள் இருவர் பலி
இத்தாலிய விமானப்படை விமானங்கள் நடுவானில் மோதியதில் அதன் விமானிகள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய விமானப்படை விமானங்கள் இரண்டு ரோம் நகரின் வடமேற்கே பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
இரண்டு U-208 விமானங்கள் ரோமில் இருந்து வடகிழக்கில் 25 கிலோமீட்டர் (15 மைல்) தொலைவில் அமைந்துள்ள Guidonia இராணுவ விமான நிலையத்திற்கு அருகே இந்த விபத்துக்குள்ளானது.
அதில் விமானங்களில் ஒன்று வயலில் விழுந்ததாகவும், மற்றொன்று சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களும் இரங்கலை தெரிவித்துள்ளார்.
Two U-208 planes collide mid-air near Guidonia??
— Avijacija 1:48 (@vesthepes) March 7, 2023
Four aircraft were flying in formation when two of the planes collided, witnesses told local media.
One crashed to the ground in a field at the Guidonia AB, the other crashed into a parked car on a street in Colfiorito. pic.twitter.com/nD5L86LWzz




