கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைத்தியரை தாக்கிய இருவர் கைது
கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதிக்கு பொறுப்பான விசேட வைத்தியரை தாக்கியதாக கூறப்படும் சுகாதார பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
72 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த 16 ஆம் திகதி முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது, இவ் வைத்தியசாலையின் புற்றுநோய் விடுதியின் கனிஸ்ட சுகாதார ஊழியர்களுக்கும் வைத்தியருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து, குறித்த இரண்டு பேரினால் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்கள் காலி கொட்டவாகம பிரதேசத்தைச் சேர்ந்த சுகாதாரப் பணியாளர் எனவும் மற்றையவர் அக்குரஸ்ஸ தியலபே பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, ஊழியர்கள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கடந்த 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட வைத்தியர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
