கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியுடன் இருவர் கைது
ஹற்றனில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை லொறியில் ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(7) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்பளை, வெலம்பொடவிலிருந்து தலவாக்கலைக்கு கழிவு தேயிலை கொண்டு செல்லப்படுவதாக அட்டன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அட்டன் மல்லியப்பு பகுதியில் வைத்து குறித்த லொறியை பொலிஸார் நிறுத்தி சோதனை செய்தனர்.
இருவர் கைது
கழிவு தேயிலையை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் அந்த லொறிக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், சாரதி மற்றும் உதவியாளர் குறித்த லொறியையும் பொலிஸார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கழிவு தேயிலை மற்றும் சந்தேக நபர்கள் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று ஹற்றன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.




