மடு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் - இருவர் கைது
மன்னார்-மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் பட்டா ரக லொறி ஒன்றில் கடத்தி செல்லப்பட்ட 4 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா பொதியினை நேற்று முன்தினம்(13) பொலிஸார் மீட்டுள்ளனர்.
மடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாகச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல வீரசிங்கவின் பணிப்பில் பொலிஸ் குழுவினர் மேற்படி கடத்தி செல்லப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கொண்டு சென்ற பட்டா லொறி மற்றும் சந்தேக நபர்கள் இருவர் நேற்று முன்தினம்(13) இரவு 9.30 மணியளவில் குஞ்சுக்குளம் பொலிஸ், இராணுவ சோதனைச் சாவடியில் கைது செய்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட இரு நபர்கள் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடைய நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் பட்டா லொறி மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.







6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
