ஹெக்கர்களால் சுருட்டப்பட்ட பல மில்லியன் டொலர் - கொந்தளிக்கும் சஜித்
டிஜிட்டல் நாட்டை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசு, நாட்டின் 2.5 மில்லியன் டொலர் வரிப்பணத்தை ஹெக்கர்களுக்குப் பூஜை செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன்தொகை ஹேக்கர்களால் சுருட்டப்பட்ட விவகாரம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்துப் பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார்.
2.5 மில்லியன் டொலர் மோசடி
மக்களின் வரிப்பணமான 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஜனவரி மாதமே நடந்துள்ளது.
சஜித் பிரேமதாஸ இந்த விவகாரம் தொடர்பான சுட்டிக்காட்டுகையில், இதற்காக மார்ச் மாதம் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவ்வாறிருக்கையில், நேற்றுமுன்தினம் பொதுவெளியில் இந்தத் தகவல் கசியும் வரை, அரசும் நிதி அமைச்சும் இதனை இரகசியமாக வைத்திருந்தது ஏன்? நாட்டின் நிதி அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்துக்கு இதனைத் தெரிவிக்காதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் பொதுக்கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் வெளிநாட்டு மூலவளத் திணைக்களம் ஆகியவற்றுக்குக் கடன் செலுத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட பின்னர், முறையான பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வங்கிப் பரிவர்த்தனைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய மின்னஞ்சல் உறுதிப்படுத்தல் மற்றும் 'வைட் லிஸ்டட்' நடைமுறைகளை நிதி அமைச்சு ஏன் பின்பற்றவில்லை?
இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தும், பாதுகாப்பு நடைமுறைகள் அலட்சியம் செய்யப்பட்டுள்ளன என்று அவர் குற்றம் சாட்டினார்.
நடுநிலையான விசாரணை
மேலும், தற்போது அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழுவின் நம்பகத்தன்மை குறித்தும் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
குற்றம் சாட்டப்பட்ட அதே நிறுவனத்தின் ஊழியர்களைக் கொண்டு விசாரணைகளை நடத்துவது எந்த வகையில் நியாயம்?
பொது நலவாய விருதைப் பெற்ற ஒரு நிறுவனம், இவ்வளவு பெரிய தொகையை ஒருவரின் கணக்குக்கு மாற்றியது வியப்பளிக்கின்றது. எனவே, இது குறித்து வெளிப்படையான, நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சஜித் வலியுறுத்தினார்.

நடமாடும் நூலகங்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்களால், ஒரு ஹெக்கரிடமிருந்து நாட்டின் நிதியைப் பாதுகாக்க முடியவில்லை.
அரசின் இந்தத் திறமையின்மையால் ஏற்பட்ட 25 இலட்சம் டொலர் இழப்பை, மீண்டும் மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு ஈடுகட்ட முயற்சிக்க வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது எச்சரித்துள்ளார்.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam