மே 9 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2,393 சந்தேகநபர்கள் கைது - செய்திகளின் தொகுப்பு
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற 856 வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 2,393 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று 45 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் 18 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை மற்றும் அமைதியின்மை தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை 1,055 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,



