திருகோணமலை மாவட்ட மட்ட ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதலிரு இடங்களை பெற்று சாதித்த மாணவிகள்(Video)
2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முடிவுகளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி டேகா உமாசங்கர் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
முதலாவது இடத்தைப் பெற்ற ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி ஆகிய இருவரும் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
சித்திபெற்ற மாணவிகள்
முதலாவது இடத்தைப் பெற்று மாணவி டேகா உமாசங்கர் எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும், தனக்கு கற்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இரண்டாம் இடத்தைப்பெற்ற மாணவி ஜகுபர் றிஸ்னி, தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தனது வெற்றிக்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விக்காக உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் பெண் நோயியல் வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 13 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri