திருகோணமலை மாவட்ட மட்ட ரீதியில் விஞ்ஞான பிரிவில் முதலிரு இடங்களை பெற்று சாதித்த மாணவிகள்(Video)
2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முடிவுகளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி டேகா உமாசங்கர் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும், மாணவி ஜகுபர் றிஸ்னி மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
முதலாவது இடத்தைப் பெற்ற ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி டேகா உமாசங்கர் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெற்ற ஸாஹிரா கல்லூரி மாணவி ஜகுபர் றிஸ்னி ஆகிய இருவரும் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
சித்திபெற்ற மாணவிகள்
முதலாவது இடத்தைப் பெற்று மாணவி டேகா உமாசங்கர் எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த வைத்திய நிபுணராக வருவதற்கு ஆசைப்படுவதாகவும், தனக்கு கற்பதற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை இரண்டாம் இடத்தைப்பெற்ற மாணவி ஜகுபர் றிஸ்னி, தந்தை கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், தனது வெற்றிக்கு உதவிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மற்றும் கல்விக்காக உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் பெண் நோயியல் வைத்திய நிபுணராக வர வேண்டும் என்பதே தனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam

மாஸ் வெற்றிப் படமாக அமைந்த சூரியின் மாமன் மொத்தமாக செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா? Cineulagam
