படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)

Batticaloa Vavuniya Sri Lanka Journalists In Sri Lanka
By Siva thileep May 31, 2022 12:42 PM GMT
Siva thileep

Siva thileep

in சமூகம்
Report

2004ம் ஆண்டு மட்டக்களப்பில் படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு - காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் நடைபெற்றது. 

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், முன்னாள் கிழக்கு மாகாணசபைத் தவிசாளரும், டெலோவின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா, உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அமரர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

கடந்த 2004ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மட்டக்களப்பு எல்லை வீதியில் வைத்து ஆயுதக் குழுவொன்றினால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டமையும், அவருக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

செய்தியாளர் : குமார்

வவுனியா

வவுனியாவில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18 ஆவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

 வவுனியா ஊடக அமையில் இன்று (31) குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

ஊடகவியலாளர் பணி நிமித்தம் சென்ற போது மட்டக்களப்பில் கடந்த 2004 ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

ஊடக அமையத்தின் தலைவர் பரமேஸ்வரன் கார்த்திபன் தலமையில் இடம்பெற்ற இவ் நிகழ்வு ஒரு நிமிட அக வணக்கத்துடன், ஆரம்பமாகி ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவ படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து மெழுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

செய்தியாளர் :  திலீபன்

முல்லைத்தீவு 

படுகொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் 'நாட்டுப்பற்றாளர்'ஐயாத்துரை நடேசனின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (31)முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் திருவுருவப்படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த 2004 ஆண்டு இதே நாளில் மட்டகளப்பில் வைத்து ஆயுததாரிகளால் ஊடகவியலாளர் நடேசன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan

செய்தியாளர் : குமணன்

மட்டக்களப்பு

நடேசன் படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்களாகியும், அவரைப் படுகொலை செய்தவர்கள் மிகவும் சுதந்திரமாக, இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற கொடிய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது மிகவும் வேதனையானதும், இந்த நாட்டின் நீதியின் மேலுள்ள கலங்கமுமாகவே பார்க்கப்படுகின்றது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாhளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐ.நடேசன் அவர்களின் 18வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஊகவியலாளர்களின் சுதந்திரத்திலே தலையிடாமல் படுகொலை செய்யப்பட்ட நடேசன் உள்ளிட்ட ஏனைய பத்திரிகையாளர்களின் படுகொலைகளுடன் தொடர்புடையவர்களை நீதியின் முன்நிறுத்தி ஊடகவியலாளர்களுக்கு நியாயபூர்வமான தீர்வினை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos) | 18Th Commemoration Journalist Aiyathurai Nadesan





மரண அறிவித்தல்

இளவாலை, Edmonton, Canada, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி, உடுப்பிட்டி, Caledon, Canada

02 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், கண்டி

28 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, சொலோதென், Switzerland

03 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US