பிரித்தானியாவில் 3 கொலை செய்த குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவர் கைது
பிரித்தானியாவில் (UK) உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 3 பேரை கொலை செய்ததன் குற்றச்சாட்டில் 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
லூட்டன் நகரில் (Luton) உள்ள குடியிருப்பொன்றில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களை கொலை செய்ததாக குறித்த சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் பொலிஸார் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் அப்பகுதியை சேர்ந்த நிக்கோலஸ் புரோஸ்பர் என்ற 18 வயது சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த சிறுவன் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் உயிரிழந்த மூவரையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய, அந்த சிறுவன், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 4 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
