இலங்கை மற்றும் இந்திய கடற்றொழிலாளர்கள் 17 பேர் கடற்படையினரால் கைது
இலங்கை (Sri Lanka), இந்திய (India) கடற்றொழிலாளர்கள் 17 பேர் 6 படகுகளுடன் இருநாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (16.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது .
5 படகுகளில் கடற்றொழிலுக்குச் சென்ற வடக்கு மற்றும் கிழக்கைச் சேர்ந்த 14 இலங்கை கடற்றொழிலாளர்கள் இந்தியாவின் காரைக்கால் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காரைக்காலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இயந்திரக் கோளாறு
இதேவேளை தமிழகம் - தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மல்லிப்பட்டின கடற்றொழிலாளர்கள் மூவர் பயணித்த படகு ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக மாதகல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
இவ்வாறு கரை ஒதுங்கிய படகில் பயணித்த மூன்று தமிழக கடற்றொழிலாளர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இளவாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
