ஆசிரியரை கத்தியால் குத்திய 16 வயது சிறுமி
காலி போத்தல, காசிதெனிய பிரதேசத்தில் வசித்து வரும் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதான சிறுமியும் சிறுவனும் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் 45 வயதான ஆசிரியர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர், கத்தியால் குத்திய 16 வயதான சிறுமியின் தாயாருடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் அது பற்றி விசாரிக்க சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam