ஆசிரியரை கத்தியால் குத்திய 16 வயது சிறுமி
காலி போத்தல, காசிதெனிய பிரதேசத்தில் வசித்து வரும் ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் சென்ற 16 வயதான சிறுமியும் சிறுவனும் ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக போத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த பத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும் 45 வயதான ஆசிரியர் பத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்த ஆசிரியர், கத்தியால் குத்திய 16 வயதான சிறுமியின் தாயாருடன் தவறான தொடர்பு வைத்திருப்பதாகவும் அது பற்றி விசாரிக்க சிறுமி ஆசிரியரின் வீட்டுக்கு சென்றிருந்த போது, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் குறித்து போத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri