இராணுவத்தினருக்கு திடீரென ஏற்பட்ட குழப்பம் - 16 பேர் வைத்தியசாலையில் அனுமதி
வாகரையில் அமைந்துள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 16 படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த 16 பேர் நேற்றைய தினம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புடிங் வகை உணவினை உட்கொண்ட பின்னர் இவர்கள் நோய்வாய்ப்பட்டடுள்ளனர். இவர்களில் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை ஆபத்தாக இல்லை என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.