வவுனியாவில் கடுகதி புகையிரதம் மோதி 16 எருமை மாடுகள் பலி
வவுனியா - ஓமந்தை பகுதியில் இன்று காலை கடுகதி புகையிரதம் மோதியதில் 16 எருமை மாடுகள் பலியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதமே ஓமந்தை பகுதியில் மேச்சலில் ஈடுபட்டிருந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளதாக தெரியவருகிறது.
வவுனியா மாவட்டத்தில் மேச்சல் தரை இன்மையால் பலரும் தமது மாடுகளை மேச்சலுக்காக வேறு இடகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அவை வீதியோரங்கள், புகையிரத வீதிகளுக்கு அருகிலேயே இரை தேடி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை இவ்வாறு மேய்ச்சலுக்காக வரும் மாடுகள் வீதியின் குறுக்காக செல்லும் சந்தர்ப்பங்களும் பதிவாகும் நிலையில் இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
