மின்சார சபை கடும் நெருக்கடி நிலையில்
இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதில் 105 பொறியியலாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்று சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கடும் நெருக்கடிக்கு ஏற்படும் நிலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிர்வாக சபையில் பணிபுரிந்து மிகவும் சிக்கலான கடமைகளில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் தமது பணியை மேலும் துறந்தால் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

விடுமுறையில் வெளிநாட்டில் இருக்கும் ஏராளமான பொறியாளர்கள் தங்களுடைய நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
அதன் காரணமாக அவர்கள் மீண்டும் பணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.
வெளிநாட்டில் ஒரு புதிய பொறியாளர் மாதம் சுமார் 4,000 டொலர்கள் சம்பளம் பெறுவதுடன், அனுபவம் வாய்ந்த பொறியாளர் சில நாடுகளில் மாதம் 6,000 முதல் 8,000 டொலர்கள் வரை சம்பளம் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri