மன்னார் மாவட்டத்தில் 8 நாட்களில் 154 கோவிட் தொற்றாளர்கள்
மன்னார் மாவட்டத்தில் நேற்று(8) மேலும் புதிதாக 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது வரை 2547 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று (9) விடுத்துள்ள கோவிட் நிலவர அறிக்கையில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் நேற்று(8) மேலும் புதிதாக 26 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 154 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் கடந்த 7 ஆம் திகதி மன்னாரைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவர் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மாவட்டத்தில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக
அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் இவ்வருடம் 2530 கோவிட் தொற்றாளர்களும் தற்போது வரை 2547 கோவிட்
தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறித்த
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
