மட்டக்களப்பில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
மட்டக்களப்பு - வெல்வாவெளி பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 18 வயது இளைஞரொருவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 15 வயதுடைய தனது மகளை 18 வயது இளைஞரொருவர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இளைஞர் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றிரவு குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.