அரசாங்கத்தின் நிர்வாகத்தை தொடர 15 அமைச்சுக்கள் உகந்தது! ஆய்வில் வெளியான தகவல்
அரசாங்கத்தின் நிர்வாகத்தை 30 அமைச்சுக்களுடன் தொடர்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்த போதிலும், 15 அமைச்சுக்கள் உகந்ததாக இருக்க முடியும் என்றும் வெரிடே ரிசர்ச் என்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த மே 17 அன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட தகவலில் தற்போது, சுமார் 30 அமைச்சுக்கள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். அதனை விரிவுப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
15 அமைச்சுகள்
எனினும் இலங்கையில் அமைச்சரவை அமைப்பதற்கான ஒரு பகுத்தறிவு முறை என்ற தலைப்பில் தாம் 2020இல் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் 15 அமைச்சுகளை வெரிடே ஆய்வு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அவையாவன,
1. நிதி மற்றும் திட்டமிடல்
2. நீதி
3. பாதுகாப்பு
4. கல்வி மற்றும் ஆராய்ச்சி
5. ஆரோக்கியம்
6. விவசாயம்
7. உழைப்பு
8. பொது பயன்பாடுகள்
9. துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து, மற்றும் சிவில் விமான போக்குவரத்து
10. பொருளாதார விவகாரங்கள்
11. உள்துறை மற்றும் பொது நிர்வாகம்
12. வெளியுறவு
13. குடும்பம் மற்றும் சமூக வளர்ச்சி
14. சமூகம் மற்றும் கலாசாரம்
15. சுற்றுச்சூழல்
என்ற அமைச்சுக்களையே குறித்து ஆய்வு பரிந்துரைத்திருந்தது.
ஆய்வின் தகவல்
இதேவேளை துண்டு துண்டாக - தொடர்புடைய துறைகள்,வெவ்வேறு அமைச்சுக்களாக பிரிக்கப்பட்டு, தவறான சீரமைப்பு காரணமாகவே கடந்த காலங்களில், அதிகரித்த செலவுகள், முடிவெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் தாமதங்களை உருவாக்கின.
அத்துடன் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் திறனைக் குறைத்தது என்று வெரிடே ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில் 15 அமைச்சுக்களும் உகந்த முறையில் வடிவமைக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டும் என்று வெரிடே ஆய்வு தெரிவித்துள்ளது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 20 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri
