படுகொலை செய்யப்பட்ட புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Video)
இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று(01.11.2022) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
படுகொலை
இவர் இராணுவத்தினரால் கடந்த 2008.11.01 அன்று படுகொலை செய்யப்பட்டார்.இவரின் நினைவேந்தல் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது செல்லத்துரை புருசோத்தமனின் நினைவுருவபடத்திற்கு பல்கலை மாணவர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.
தொடர்சசியாக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் சி.ஜெல்சினால் நினைவுரையும் இடம்பெற்றது.
தமிழ்த்தேசியத்தில் அக்கறை கொண்டவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவரான இவர் மிகவும் இக்கட்டான காலப்பகுதியில் (2006-2007) கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவராகப் பொறுப்பேற்று மாணவர் நலனிலும் பல்கலைக்கழக நலனிலும் அக்கறை கொண்டு செயற்பட்டுள்ளார்.
மேலும் தமிழ்த்தேசிய நலனிலும் பற்றுடையவராகத் திகழ்ந்துள்ளார். இவர் சமூகவியற் துறையில்
2ம் நிலையில் தேர்ச்சி பெற்று ஆளுமையுள்ள பட்டதாரியாக வெளியேறி குறுகிய
காலப்பகுதியில் (01.11.2008)இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
