வெளிநாடுகளில் பணியாற்றும் 142 இலங்கையர்கள் கோவிட் தொற்றினால் பலி!
வெளிநாடுகளில் தொழில்புரியும் 142 இலங்கையர்கள் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“மத்திய கிழக்கு நாடுகள் உட்பட 16 நாடுகளில் தொழில் புரிந்துவரும் இலங்கையர்கள் 4800 பேர்வரை கோவிட் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றனர். அவர்களில் 4600பேர் பூரண குணமடைந்துள்ளனர். இவர்களில் இதுவரை 142 பேர் மரணித்துள்ளனர்.
உயிரிழந்த அனைவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்தவர்களாகும். இதனால் கோவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது.
இதன்படி, தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்வதற்கு தேவையான தொழில் ஒப்பந்தம், விசா அனுமதி பத்திரம் மற்றும் தொழில் நியமனம் பத்திரம் பெற்றவர்கள் கொவிட் தடுப்பூசி பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 10 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan