14 வயது சிறுமி துஷ்பிரயோகம்! சந்தேகநபருக்கு விளக்கமறியல்
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சந்தேக நபருக்கு ஏற்கனவே பிணையாளரை மிரட்டியமை, வீட்டை உடைத்துத் திருடியமை மற்றும் திருட்டு பொருட்களை வைத்திருந்தமை போன்ற வழக்குகள் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.